Featured post

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த ப...

Thursday, 3 July 2025

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review



ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது anl arasu . vijay sethupathi ஓட மகனான surya vijay சேதுபதி தான் இந்த படத்துல lead role ல நடிச்சிருக்காரு. இவரோட சேந்து Varalaxmi Sarathkumar , Devadarshini , J. Vignesh , Abi Nakshatra, Varsha , Sampath Raj, Muthukumar, Dileepan, Ajay Ghosh, Harish Uthaman, Munnar Ramesh, Naveen, Rishi, Nandha Saravanan, Aadukalam Murugadoss, , Sreejith Ravi, Aadukalam Naren னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் நாளைக்கு release  ஆக போது. anal arasu ஒரு stunt chereographer . இவரு fight master அ tamil , telugu, malayalam , hindi னு பல படங்கள் ல work பண்ணிருக்காரு. இப்போ இவரு ஒரு director அ இந்த படத்துல அறிமுகம் ஆகுறாரு. அது மட்டுமில்ல surya ஒரு actor அ நடிக்கிற முதல் படமும் இது தான். இந்த படம் நாளைக்கு release  ஆக போது.


சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். இந்த படத்தோட கதை north  சென்னை ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. படத்தோட starting  லேயே MLA  வா இருக்கற sampath  raj  அ கொடூரமான முறைல கொன்னுடுறாங்க. இந்த கொலைக்கு காரணம் surya  vijaysethupathi தான் னு இவரை arrest  பண்ணி juvenile home ல அடைச்சு வைக்கிறாங்க. surya அங்க போன ஒடனே நெறய கஷ்டங்களை சந்திக்குறாரு அது மட்டும் கிடையாது mla ஓட ஆட்களும் surya வை பழி வாங்குறதுக்காக காத்துகிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் தன்னை கொல்லவந்தவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது இன்னொரு பக்கம் trauma ல இருந்து வெளில வருதுன்னு  ரொம்பவே கஷ்டப்படுறாரு surya. surya எதுக்காக இந்த mla வை கொல்லனும்? இதுக்கான காரணம் என்ன? இவரை சுத்தி நடக்கற பிரச்சனை ல இருந்து surya தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


surya வா நடிச்சிருக்க surya vijaysethupathi ஒரு raw ஆனா performance அ வெளி படுத்தி இருக்காரு. இவரோட screen presence , body language, dialogue delivery னு எல்லாமே  அட்டகாசமா  இருந்தது. varalakshmi  sarathkumar ஒரு வில்லத்தனமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. மத்த supporting  actors  ஆனா abhinaya , devadharshini , vignesh எல்லாரோட நடிப்பும் நல்ல இருந்தது. அதுமட்டுமில்லாம ஒரு emotional  ஆனா impact அ இவங்க படத்துக்கு குடுத்திருக்காங்க னே சொல்லலாம். 


anal arasu ஒரு stunt chereographer ண்றதுனால action scenes எல்லாம் அவ்ளோ interesting அ இருக்கிற மாதிரி படத்துல வச்சிருக்காரு. படத்தோட first  half ஏ energetic அ போகுது னு சொல்லலாம். அப்புறம் அப்படியே second half ல வர flashback அப்புறம் நடக்கற action sequences னு எல்லாமே super அ இருந்தது. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் அவ்ளோ gripping அ கதையை கொண்டு போயிருக்காங்க. என்ன தான் இந்த revenge எடுக்கற theme பழைய கதையை இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் ரொம்ப different ஆவும் engaging ஆவும் இருந்தது னு தான் சொல்லணும். படத்தோட technical aspect னு பாக்கும் போது எல்லாமே இந்த படத்துக்கு plus அ தான் அமைச்சிருக்குனு சொல்லணும். editing work ரொம்ப sharp அ clear அ குடுத்திருக்காங்க, தேவையில்லாத scenes னு நம்ம எதுவுமே சொல்ல முடியாது ரொம்ப fast அ கொண்டு போயிருக்காங்க. அப்புறம் cinematography யும் இந்த படத்துக்கு பக்க பலமா இருக்குனு சொல்லலாம். அப்புறம் இந்த படத்துல வர bgm  அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. முக்கியமா action sequences க்கு வர bgm எல்லாமே அட்டகாசமா இருந்தது னு தான் சொல்லணும். 


எப்படி pheonix பறவை எதனை தடவை அழிஞ்சு போனாலும் திரும்பவும் உயிரோட வருதோ அதே மாதிரி தான் இந்த படத்துல நடிச்சிருக்க surya எவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் ஒரு pheonix பறவையை போல எதிர்த்து நிக்குறாரு.  மொத்தத்துல ஒரு emotional ஆனா, revenge drama தான் இந்த pheonix திரைப்படம். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and  friends  ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

3BHK Movie Review

3BHK Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம 3 bhk படத்தோட review அ தான் பாக்க போறோம். ஸ்ரீகணேஷ் தான் இந்த படத்தோட கதையை எழுதி direct யும் பண்ணிருக்காரு. aravindh sachidanatham அவர்களுடைய சிறுகதை ஆனா 3bhk வீடு ன்ற கதையை base பண்ணி தான் இ


ந்த படம் எடுத்துருக்காங்க . Siddharth, R. Sarathkumar, Devayani, Yogi Babu , Meetha Raghunath , chaitra j achar , subbu panchu , vivek prasanna னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இது ஒரு family drama னு சொல்லலாம் அப்புறம் இந்த படம் நாளைக்கு release ஆக போது. இந்த படம் siddharth க்கு 40 ஆவுது படம் அதுமட்டும்கிடையாது, 20 வருஷம் கழிச்சு மறுபடியும் sarathkumar and devayani ஒண்ணா நடிச்சிருக்காங்க. chaitra j achar க்கு இது தான் முதல் தமிழ் படம் இவங்க கன்னட ல படம் பண்ணிருக்காங்க. 


என்னதான் இந்த படம் நாளைக்கு release அகா போறத இருந்தாலும் நேத்து இந்த படத்தை சினி actors க்கும் movie influencers க்கும் போட்டு காமிச்சாங்க. அதுல நடிகர் simbu அவரோட X தள பக்கத்துல ஒரு நல்ல emotional ஆனா படம் நும் sarathkumar அப்புறம்  siddharth ஓட நடிப்பு நல்ல இருந்தது னு comment பண்ணிருந்தாரு. இன்னும் பலர் இந்த படத்தை வெகுவா பாராட்டி இருந்தாங்க. படத்தோட title அ பாத்த அப்பவே புரிஞ்சுருக்கும், ஒரு வீட்டை base பண்ணி தான் கதை நகர்து. விலைவாசி எல்லாம் ஏறிப்போயிடுச்சு, இந்த மாதிரி சூழல் ல ஒரு சொந்த வீடு வாங்குறது ன்றது எவ்ளோ கஷடம் நும் பல பேருக்கு தெரியும் அதுவும் ஒரு middle class family னா சொல்லவே வேண்டாம். ஒரு சிலர்க்கு சொந்த வீடு வாங்கணும் ன்றது கனவா இருக்கும்,  ஒரு சிலர்க்கு மரியாதையோட இருக்கணும்ன்றதுக்க்காக இருக்கும். இந்த மாதிரி ஒரு ஓடத்துல எத்தனை பேர் அவங்களுக்குனு ஒரு சொந்த வீட்டை வாங்கிருக்காங்க ன்றது ஒரு பெரிய கேள்விக்குறி தான். 


சோ இந்த படத்தோட கதைல பாத்தீங்கன்னா ஒரு middle class குடும்பம் நெறைய கஷ்டத்தை சந்திக்கறாங்க, அவங்களோட ஒரே கனவு சொந்தமா ஒரு 3bhk வீட்டை வாங்குறது தான். vasudhevan அ நடிச்சிருக்க sarathkumar , shanthi யா நடிச்சிருக்க devayani husband and wife அ இருக்காங்க. இவங்களுக்கு prabhu வா நடிச்சிருக்க siddharth யும் aarthy யா நடிச்சிருக்க meetha raghunath னு ரெண்டு பெரிய பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சின்ன middle class family யை சேர்ந்தவங்க தான். vasudevan தான் வேலைக்கு போய் தன்னோட குடும்பத்தை பாத்துக்குறாரு. இவங்க  வாடகை வீட்ல தான் தங்கி இருப்பாங்க,  ஆனா அடிக்கடி வீட மாத்திட்டே இருப்பாங்க. vasudevan யும் சொந்தமா வீடு வாங்குறதுக்காக காசு சேத்து வச்சுட்டு இருப்பாரு அவரை பொறுத்த வரைக்கும் சொந்தமா வீடு இருந்தாதான் மரியாதை இருக்கும் ன்றது அவரோட எண்ணம். 


எப்பலாம் இவங்க  வீடு வாங்கணும் ன்ற  கனவை அடையும் போது திடுருனு எதாவுது  ஒரு தேவையை சந்திக்கறாங்க. கடைசில வீடு வாங்குறது முக்கியமா இல்ல அந்த தேவையை solve பண்ணறது முக்கியமா னு வரும் போது இந்த தேவையை  solve பண்ணறது தான் முக்கியம் ன்ற situation க்கு தள்ள படுறாங்க. தன்னோட பையன் பையன் படிப்புக்கு செலவு பண்ணுறாரு vasudevan. அப்போ தான் தன்னோட பையனும் நம்மோட கனவுக்கு உறுதுணையா இருப்பான் ன்ற எண்ணத்தோட இருக்காரு. ஆனா prabhu க்கும் இவரோட அப்பா மாதிரியே வேற ஒரு சில பிரச்சனைகளை face பண்ணிட்டு இருப்பாரு. கடைசில இந்த குடும்பம் ஒரு வீட்டை வாங்குனாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஓவுவுறு வாட்டியும் ஏதாவுது பிரச்சனைகள் வரும்போது அதையும் எதிர்த்து நின்னு விடாம ஓடிக்கிட்டே இருக்கிறது தான் middle class family ஓட mentality ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. வாழ்க்கையே ஒரு race மாதிரி தான், நம்ம தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கணும், இந்த மாதிரி போகும் போது ஓவுவுருத்துரும் என்னனா கஷ்டங்களை சந்திக்கறாங்க ன்றது தான் இந்த படத்தோட உட்கருத்து னு சொல்லலாம். நம்ம ஒரு லட்சியம் அடையும்போது தான் நெறய விஷயங்கள சந்திப்போம் உதரணத்துக்கு திடுருனு medical செலவு வர்ரது, education fees கட்டுறது இல்லனா family emergency னு நம்ம சொல்லிட்டே போகலாம். இந்த மாதிரி நெறய moments இந்த படத்துல director குடுத்துருக்காரு. அதுனால படத்தை பாக்குற audience  க்கு இதெல்லாத்தயுமே relate பண்ணிக்க முடியும். 


ஆனா எல்லா middle class family யும் இவங்க குடும்பம் மாதிரி இருக்கும் னு தான் தெரியல. vasudevan எந்த ஒரு முக்கியமான விஷயத்தை decide பண்ணனும் னாலும் முதல அவரோட குடும்பத்துக்கிட்ட தான் கேட்பாரு. எல்லாத்தயும் இவரோட மனைவி கிட்டயும் பசங்க கிட்டயும் சொல்லுவாரு. பசங்கள உதாசீன படுத்தாம அவங்க  ஒரு விஷயம் சொன்ன அதா consider பண்ணிக்குறாரு. இந்த மாதிரி விஷயங்கள் தான் இன்னும் இந்த படத்துக்கு அழகா சேக்குது னு சொல்லலாம். real estate ல நடக்கற விஷயங்கள் ல இருந்து society ஓட pressure வரைக்கும் இதுல explore பண்ணிருக்காங்க. ஒரு குடும்பத்துல எடுக்கற எல்லா முடிவுகளும் நன்மை ல போய் முடியும் னு கட்டாயம் கிடையாது அதுக்காக ஒருத்தர் மேல தப்பு சொல்ல்றதுனாலயும் ஒன்னும் ஆகப்போறதில, அதுனால பண்ண தப்பு ல இருந்து கத்துக்கிட்டு மறுபடியும் புதுசா ஆரம்பிக்குறதுல தான் வாழக்கை இருக்கும்னும் இதுல வயசு லாம் முக்கியம் கிடையாது நும் எடுத்து சொல்லிருக்காங்க. 


siddharth ஓட performance super அ இருந்தது. ஒரு நல்ல எதார்த்தமான நடிப்பு. கிட்டத்தட்ட chitha படம் போலவே இந்த படத்துலயும் இவருக்கு மக்கள் கிட்ட இருந்து ஒரு  நல்ல வரவேற்பு இருக்கும் னே சொல்லலாம். sarathkumar அ பத்தி சொல்லவே வேண்டாம், ஒரு குடும்ப தலைவர , தன்னோட குடும்பத்துக்காக ஓடி உழைக்குறது, பசங்களுக்கு உறுதுணையா நிக்குறது னு ஒரு பக்க middle class family man ஆவே நடிச்சிருக்காரு. meetha raghunath ஓட நடிப்பால எல்லாரையும் அவங்க பக்கம் ஈர்க்குறாங்க னு தான் சொல்லணும். அவ்ளோ அழகா நடிச்சிருக்காங்க. கடைசியா தேவயானி இவங்களோட நடிப்பு ரொம்ப natural அ இருந்தது. இவங்கள தவிர்த்து supporting actors அ நடிச்சிருக்க chaitra , yogi babu, subbu panchu , vivek prasanna னு இவங்களோட நடிப்பும் சிறப்ப இருந்தது. 


amrit ramnath தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. songs and bgm எல்லாமே இந்த படத்துக்கு ஏத்த மாதிரி soulful அ இருந்தது னு தான் சொல்லணும். Dinesh B Krishnan and JIthin ஓட cinematography ஒரு சாதாரண middle class family ஓட கஷ்டங்களை வலிகளை audience ஓட கண் முன்னாடி நிறுத்திட்டாங்க னு தான் சொல்லணும். மொத்தத்துல actors ஓட strong ஆனா performance , realistic ஆனா கதைக்களம் ஒரு good feel movie தான் இந்த 3 bhk  திரைப்படம். கண்டிப்பா இந்த படத்தை உங்க family  and  friends  ஓட சேந்து theatre  ல போய் பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு*

 *சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு*



மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'


திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஜூலை நான்காம் தேதியன்று அமேசான் பிரைம் (இந்தியா), சன் நெக்ஸ்ட்,சிம்பிள் சவுத் ( வேர்ல்ட் வைட்) மற்றும் டென்ட் கொட்டா ஆகிய முன்னணி டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. 


நடுத்தர மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும் , யதார்த்தமாகவும் விவரித்திருக்கும் 'மெட்ராஸ் மேட்னி ' திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி

 *”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!*






ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. 


நடிகை கிரேஸ் ஆண்டனி, "ராம் சார் படத்துக்காக என்னை அழைத்தபோது அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய கதையில் நான் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடைய டெடிகேஷன் வேற லெவல்! சிவா, அஞ்சலியுடன் நடித்தது மகிழ்ச்சி. ராம் சார் என் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.


*நடிகர்கள்:* சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.


*தொழில்நுட்பக் குழு:* 


எழுத்து, இயக்கம்: ராம்,

ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,

படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,

இசை: சந்தோஷ் தயாநிதி,

பாடல் வரிகள்: மதன் கார்க்கி,

தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,

சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,

காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,

நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,

ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,

ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,

கலரிஸ்ட்: ராஜசேகரன்,

விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,

ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,

ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,

விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,

தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்‌ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ்,

தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,

உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா - அப்துல் நாசர்

Wednesday, 2 July 2025

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 




ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 


BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை”  புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.


முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. 


காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க,  நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 


பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என  அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன்,  கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை  V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். 


இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu

 Director Jyothi Krisna re-designed Bobby Deol’s character (Aurangzeb) in Hari Hara Veera Mallu after watching Animal






It is known that Bobby Deol is playing the role of Mughal emperor Aurangzeb in Pawan Kalyan’s upcoming film Hari Hara Veera Mallu. The period drama is directed by Jyothi Krishna. Initially, Bobby Deol shot some scenes in the film. But later, after the director watched Bobby’s performance in Animal, he decided to completely re-write and redesign his character in Hari Hara Veera Mallu.


“Bobby Deol’s garu performance in Animal was spell bounding. His ability to convey emotions through expressions alone, despite the character's lack of dialogues was something we all were blown away. I decided to change the arc of his character in our film too, and give a complete makeover,” said Jyothi Krishna. His desire to improve the character's arc and better fit the role’s strength was the key to bring emotional depth in Bobby Deol’s performance. The revised role amplifies certain aspects of the character's personality and infuse more riveting and compelling performance.


The director made major adjustments to the character's personality, backstory, motivation, and physical portrayal. Jyothi Krisna felt that Aurangzeb’s character needs a more compelling arc to do justice to Bobby Deol’s new-found stardom and live up to his expectations. “When I narrated the revised script, Bobby garu was very excited. He is an actor who always likes to explore different possibilities and present a newer version of himself to the audiences. In Hari Hara Veera Mallu, Bobby Deol looks more intense. His powerful screen presence, elegance and the way he expresses a lot with his eyes speaks volumes. Working with him has been a great experience,” shared the director.

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய

 • ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!






• ‘அனிமல்’ தாக்கம்: ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை புதுப்பித்த ஜோதி கிருஷ்ணா!


• ‘அனிமல்’ படத்தில் பாபி டேயோலின் நடிப்பு, ஹரி ஹர வீரமல்லு இயக்குநரின் கதாபாத்திர மறுஉருவாக்கத்தை தூண்டியது!


• ஹரி ஹர வீரமல்லுவில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மீண்டும் கவனித்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!


பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும்

தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.


படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோல் அவர்களின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி டேயோல் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, ஜோதி கிருஷ்ணா அவர்கள் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தார்.


“பாபி டேயோல் அவர்களின் ‘அனிமல்’ படத்தில் அளித்த அந்த மௌன நடிப்பு நம் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரி ஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் வழித்தோணியை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்,” என்கிறார் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.


இந்த புதிய வடிவமைப்பின் மூலம் ஔவரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி டேயோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.


“புதிய கதாபாத்திர வடிவத்தை நான் அவரிடம் சொன்னபோது, பாபி டேயோல் அவர்கள் மிகுந்த உற்சாகத்தைத் தெரிவித்தார். அவருக்கு, சவாலான வேடங்களில் நடிப்பதும், புதியதொரு வடிவில் ரசிகர்களிடம் தன்னை காண்பிப்பதும் மிகவும் பிடிக்கும். ஹரி ஹர வீரமல்லு படத்தில் அவர் மிகுந்த தீவிரம் கொண்ட தோற்றத்தில் தோன்றுகிறார். அவரது பார்வையின் மூலம் தான் சொல்லும் உணர்வுகள், அவரது திரை தோற்றம், ஆளுமை அனைத்தும் கதையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றன. அவருடன் பணியாற்றிய அனுபவம் மிக சிறப்பானது,” என்கிறார் இயக்குநர்.


இவ்வாறு புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி டேயோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை

 *"மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!" - சையாரா படத்தின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி.*




அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து  'தும் ஹி ஹோ' பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார். 


மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான் நட்சத்திரங்களை பாராட்டுகிறேன்.ஏனென்றால் நம் நாட்டின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக்கூடிய இந்த இரண்டு இசை கலைஞர்களுடன் எனது சிறந்த இசையை உருவாக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.”


மிதூனுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது அற்புதமான இசைப் பயணத்தைப் பற்றி மோஹித் கூறுகையில், “மிதூனும், நானும் 2005ம் ஆண்டில் ஜெஹர் & கல்யுக் திரைப்படத்தில் இசையமைத்ததிலிருந்து எங்கள் பயணம் தொடர்கிறது. மிதூனை அறிந்து, அவருடன் இசையை உருவாக்கி, அவரது புத்திசாலித்தனமான மனதைப் பாராட்டி 20 ஆண்டுகள் ஆகிறது.  2005ம் ஆண்டில் இருந்து, மிதூனும் நானும் மர்டர் 2, ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹமாரி அதுரி கஹானி, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட், மலாங், இப்போது சையாரா .எங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக நாங்கள் ஒன்றாக உருவாக்கிய காதல் பாடல்கள்” .


“எனவே, மிதூனும் நானும் இணையும் போதெல்லாம், ஒரு சிறந்த பாடலை வழங்க எங்களிடமிருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும்.மேலும் அந்த அழுத்தத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தான் புதிதாக ஒன்றை உருவாக்க எங்களை தூண்டுகிறது.பேசப்பட வேண்டிய மக்களால் விரும்பப்படும் ஒரு பெரிய பாடலை வழங்க எங்களை தூண்டுகிறது.”


இந்திய சினிமாவில் சிறந்த பாடகராகக் கருதப்படும் அரிஜித் சிங்குடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி மோஹித் கூறுகையில் , “அரிஜித் சிங் இந்த வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க அற்புதமான நினைவுகளைத் தந்த ஒரு பாடகர். ஆஷிகி 2 இன் தும் ஹி ஹோ, சாஹுன் மைன் யா நா, ஹம் மர் ஜாயேங்கே போன்ற பாடல்களிலிருந்து ஏக் வில்லனில் ஹம்டார்ட் வரை, ஹமாரி அதுரி கஹானி டைட்டில் டிராக் , ஹாஃப் கேர்ள்ஃபிரண்டில் ஃபிர் பி தும்கோ சாஹுங்கா , மலாங்கில் சல் கர் சாலன் வரை அரிஜித் பாடிய பாடல்கள் மட்டுமல்ல, அவை என் இதயத்தின் துண்டுகள்”.


நாங்கள் மூவரும் ஒன்றாக இணையும்போது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள் என்றும், சையாராவில் அந்த அழுத்தத்தை அவர் அனுபவிக்கிறார் என்றும் மோஹித் கூறுகிறார். 


 "இயற்கையாகவே, மிதூனும் அரிஜித்தும் நானும் ஒன்றாக இணையும்போது, ​​மக்கள் மறக்க முடியாத ஒரு பாடலைக் தருவோம் என எதிர்பார்கின்றனர்  என்பதை நாங்கள் அறிவோம், அந்த எதிர்பார்ப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மூவரும் மீண்டும்  சையாரா படத்தில் இடம்பெற்ற துன் பாடலுக்காக இணைகிறோம்.இது எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல். பிரபஞ்சம் எப்படியோ எங்கள் மூவரையும் ஒவ்வொரு முறையும் ஒன்றிணைத்து மிகவும் எளிமையான மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சிபூர்வமான பாடலை உருவாக்குகிறது, "


துன் பாடலைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், "துன் என்பது காதல் வாழ்க்கையில் போராட்டத்தைக் கொண்டாடும் ஒரு பாடல், மேலும் உண்மையான போராட்டம் யாருக்கும் அனைத்து தடைகளையும் கடக்க உந்துதலை வழங்கும்.  துன் என்பது ஒருபோதும் கைவிடாத உணர்வு ,எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்."


மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் படமான சையாரா , காலத்தால் அழியாத காதல் கதைகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது.


இந்தப் படத்தில் அஹான் பாண்டே கதாநாயகனாக அறிமுகமாகிறார் கதாநாயகியாக அனீத் பத்தாவை (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளை கொண்டவர்) என்பவர் நடித்துள்ளார். 


நம் காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளம் காதல் படமாக சையாரா படம் உள்ளது . இதுவரை இந்த இசை ஆல்பத்தில் இருந்து நான்கு பாடல்களான சையாரா , ஜூபின் நௌடியாலின் பர்பாத், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ & சச்செட்-பரம்பராவின் ஹம்சஃபர் ஆகியவை இந்திய இசை அட்டவணையில் அலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 


சையாரா பட பாடல்களைத் தவிர,  இந்த படத்தின் தலைப்பான சையாராவும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. 

சாயாரா படத்தை யாஷ் ராஜ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார், இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri

 *Yash Raj Films release the next song from Saiyaara, Dhun, that reunites the dream musical trio of Arijit Singh, Mithoon & Mohit Suri!*




The blockbuster musical trio of Arijit Singh, Mithoon and Mohit Suri, who have created some of the biggest historic chartbusters in the Hindi film industry including Tum Hi Ho from Aashiqui 2, 

are back for Saiyaara’s next song Dhun which has been released today by Yash Raj Films! 


Watch the song here : 

https://youtu.be/cUmUOb7j3dc?si=0nyJyZ4Xd0yx3xQi


Mohit shares a spectacular musical journey with Mithoon spanning for over 2 decades now. They started their collaboration in 2005 when they did Zeher & Kalyug. Since 20 years, Mithoon & Mohit have worked on the biggest film music albums of our times like Murder 2, Aashiqui 2, Ek Villain, Hamari Adhuri Kahaani, Half Girlfriend, Malang and now Saiyaara.


Before coming together in Saiyaara, Arijit Singh, regarded as an all-time best singer that India has ever produced, has collaborated with Mohit Suri on several soulful hits like Tum Hi Ho, Chahun Main Ya Naa, Hum Mar Jayenge, etc from Aashiqui 2, to Humdard in Ek Villain, to Hamari Adhuri Kahani title track, to Phir Bhi Tumko Chaahunga in Half Girlfriend, to Chal Ghar Chalen in Malang.


The much-anticipated romantic film, Saiyaara, brings together Yash Raj Films and Mohit Suri, both known for creating timeless love stories, for the first time! Saiyaara has so far garnered unanimous praise for delivering an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills. 


The film launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. 


Saiyaara is buzzing these days as the most anticipated young romantic film of our times. It has delivered the best album of the year with all songs from Saiyaara, Jubin Nautiyal’s Barbaad, Vishal Mishra’s Tum Ho Toh, Sachet-Parampara’s Humsafar and now Dhun have captured audience attention and are making waves on the musical charts of India! 


YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.


Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.