Featured post

சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு

*சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வை...

Friday, 21 February 2025

சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு


*சென்னையில் ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்*







*FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார்*


சென்னை, 21 பிப்ரவரி 2025: சென்னையில் இன்று நடைபெற்ற

 ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல் ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார். 


உலகளாவிய பொழுதுபோக்கு சந்தையில் இந்தியாவின் இடத்தை வடிவமைப்பதில் பிராந்திய மொழிகள் திறன்வாய்ந்த சக்திகளாக உருவாகி வருவதையும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதையும் கருத்தில் கொண்டு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பான FICCI இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாள் நிகழ்வை சென்னையில் நடத்துகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு ஆகியவற்றின் எதிர்காலத்தை ஆராய்வதற்கான முக்கிய தளமாக செயல்படுவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் படைப்புலக பொருளாதாரத்தில் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது அடித்தளம் அமைக்கிறது.


உலகளாவிய அங்கீகாரத்தை ஈர்ப்பதில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் வலியுறுத்தினார். தமிழ்நாட்டை ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டும் என்ற டாக்டர் கலைஞர் (டாக்டர் கருணாநிதி) அவர்களின் கனவை நனவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார். சென்னையில் 152 ஏக்கர் பரப்பளவில் ஒரு அதிநவீன திரைப்பட நகரத்தை நிறுவுவது இந்த பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாக திகழும். இந்த உலகத்தரம் வாய்ந்த நகரத்தில் அதி நவீன போஸ்ட்-புரொடக்ஷன் ஸ்டுடியோக்கள், மெய்நிகர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள், அனிமேஷன் மற்றும் VFX ஸ்டுடியோக்கள், LED சுவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான 5 நட்சத்திர ஹோட்டல் என அனைத்து வசதிகளும் இடம்பெறும்," என்று திரு. உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


டாக்டர் கருணாநிதியின் கனவை நிறைவேற்றும் நோக்கில் மற்றுமொரு முக்கியமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். “2010ம் ஆண்டு, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், கேளம்பாக்கம் அருகே 90 ஏக்கர் நிலம் திரைப்படத் துறை அமைப்புகளுக்கு குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்காக 99 ஆண்டு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும், ஆனால் பயனாளிகளால் அதை முடிக்க முடியவில்லை, இதனால் உத்தரவு செல்லாமல் போனது. திரையுலக சங்கங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நமது முதலமைச்சர் அந்த உத்தரவைத் திருத்தி, நிலத்தை திரையுலகினர்  பயன்படுத்த அனுமதித்துள்ளார். திருத்தப்பட்ட உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது,” என்றார். 


திரு கமல்ஹாசன் பேசுகையில், "இந்திய சினிமா நமது கலாச்சாரத்தின் உண்மையான தூதராக திகழ முடியும். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு நீண்டகால தொலைநோக்கு திட்டம் நமக்கு தேவை. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கட்டுப்படுத்தாமல் சந்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,” என்று கூறினார்.


“மேலும்,  சினிமா மீதான மாநில பொழுதுபோக்கு வரியை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக துணை முதல்வரிடம் தெரிவிக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.


FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவரும், ஜியோஸ்டார் பொழுதுபோக்கு - தலைமை நிர்வாக அதிகாரியுமான கெவின் வாஸ் பேசுகையில், “தென்னிந்திய பொழுதுபோக்கு துறை நாடு தழுவிய வளர்ச்சியை அடைந்து, உலகளாவிய கவனத்தையும் ஈர்த்துள்ளது, இதற்கு உதாரணமாக திரு. கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் உள்ளனர். அவர்களின் படங்கள் பல ஆண்டுகளாக எல்லைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளன. ஆர் ஆர் ஆர் மற்றும் கே ஜி எஃப்-2 போன்ற படங்களாலும், தமிழ் சினிமாவின் கதைசொல்லலாலும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய திரைத்துறை மறுமலர்ச்சி, இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறது.


டிஜிட்டல் ஊடகங்கள் வேகமாக வளர்ந்து வருவதால்,  தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து செழிக்கும் மகத்தான திறனை கொண்டுள்ளன. விரைவில் தொடங்கப்பட உள்ள வேவ்ஸ் போன்ற அமைப்புகள் மற்றும் புதுமையான தொடர் முயற்சிகளின் காரணமாக இந்திய பொழுதுபோக்கு துறை உலகளாவிய பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது," என்றார். 


இந்த இரண்டு நாள் மாநாட்டில் அறிவுசார் அமர்வுகள், கூட்டங்கள், பயிற்சி பட்டறைகள், உள்ளடக்க சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அம்சங்களை இந்த மாநாடு ஆய்வு செய்யும். இந்திய சினிமாவின் உலகளாவிய செல்வாக்கு, தொலைக்காட்சி மற்றும் OTT துறைகளால் ஏற்பட்டுள்ள மாற்றம், ஒளிபரப்பு மற்றும் இசை நுகர்வை மறுவரையறை செய்யும் புதுமை திட்டங்கள் மற்றும் கேமிங், அனிமேஷன், VFX உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் எழுச்சி ஆகியவை மீது முக்கிய கவனம் செலுத்தப்படும். மேலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் வணிகம் செய்வதை எளிமைப்  படுத்துவது (EoDB), ஒழுங்குமுறை அமைப்புகள், கொள்கைகள், தடையற்ற, வளர்ச்சி சார்ந்த தொழில் சூழல் பற்றிய விவாதங்கள் நடைபெறும்.


PlayNext - டெவலப்பர் தினம் என்ற சிறப்புப் பிரிவு, கேமிங், இணைய விளையாட்டு மற்றும் இது சார்ந்த பொழுதுபோக்குகள் குறித்து ஆராயும். AVGC-XR துறையில் உலகளாவிய முன்னோடியாக இந்தியா உருவெடுப்பதை இது வெளிப்படுத்தும்.


FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & மெட்டா நிறுவன துணைத் தலைவர் மற்றும் இந்திய தலைவர் சந்தியா தேவநாதன்; FICCI ஊடக மற்றும் பொழுதுபோக்கு குழுவின் இணைத் தலைவர் & வார்னர்ஸ் பிரதர்ஸ் டிஸ்கவரி மூத்த துணை தலைவர் மற்றும் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான தலைமை மேலாளர் அர்ஜுன் நோஹ்வர்; மற்றும் FICCI தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆஷிஷ் பெர்வானி, ரவி கொட்டாரகரா, கார்த்திகேயன் சந்தானம், சஞ்சய் ஏ. வாத்வா, அங்கூர் வைஷ், ஸ்வேதா பாஜ்பாய், மகேஷ் ஷெட்டி, கிருஷ்ணன் குட்டி, ரவிகாந்த் சப்னவிஸ், முஞ்சல் ஷ்ராப், வைபவ் சவான், ஜேக்ஸ் பிஜாய், பிஜாய் அற்புதராஜ், ஆஷிஷ் குல்கர்னி உள்ளிட்ட திரையுலக முன்னணியினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 


***

Deputy Chief Minister Inaugurates ‘FICCI Media & Entertainment Business Conclave

Deputy Chief Minister Inaugurates ‘FICCI Media & Entertainment Business Conclave (MEBC)–South Connect 2025’ in Chennai, India

 






Actor Kamal Haasan announced as Chairman of FICCI Media and Entertainment, South

 

Deputy Chief Minister of Tamil Nadu, Mr Udhayanidhi Stalin, along with legendary actor-filmmaker Mr Kamal Haasan, today inaugurated the two-day media and entertainment conclave ‘FICCI MEBC South’. Mr Haasan was also announced as the Chairman of FICCI Media and Entertainment Committee, South.

 

Mr Udhayanidhi Stalin, Deputy Chief Minister of Tamil Nadu emphasized the importance of regional industries in driving global recognition. He expressed his commitment to realize the dream of Dr. Kalaignar (Dr. Karunanidhi) to make Tamil Nadu an entertainment epicenter. “A key initiative is the establishment of a state-of-the-art film city spread across 152 acres in Chennai. This world-class facility will include advanced post-production studios, virtual production technologies, animation and VFX studios, LED walls, and even a 5-star hotel for industry professionals,” he added.

 

He also made an important announcement towards fulfilling the dream of Dr. Karunanidhi, saying, “In 2010, during Dr. Kalaignar (Dr. Karunanidhi) a 90-acre land near Kelambakkam was allocated for a 99-year lease to film industry organizations for building residential complexes. The construction was to be completed within three years, but the beneficiaries couldn't finish it, rendering the order invalid. In response to a request from the associations, our Chief Minister decided to revise the order, allowing the land to be used for the intended construction. The revised order was issued recently,” Mr Stalin highlighted.

 

Mr Kamal Haasan while sharing his insights into the evolving media landscape said, “Indian cinema can become true ambassador for Indian culture. We need a long-term vision for Indian cinema, for which the government, both the state and the centre, will have to come up with regulations to not contain emerging technologies, but include emerging technologies without it impeding the existing market. Also, a request since the Deputy CM is here that we need to relook and reform the state entertainment tax on cinema.”

 

Mr Kevin Vaz, Chairman, FICCI Media and Entertainment Committee and CEO - Entertainment, JioStar said, “The South's media landscape has evolved from regional to national and now global, exemplified by icons like Mr. Kamal Haasan, whose films have broken boundaries for decades. The post-pandemic revival of the box office, driven by films like RRR and KGF-2, and Tamil cinema’s storytelling, continue to shape India’s entertainment sector. As digital media grows rapidly, I believe India is an “AND” market, where both TV and digital coexist, unlocking immense potential. With upcoming forums like WAVES and continued innovation, India’s media industry is poised to take the global stage.”

 

The event aims to serve as a pivotal platform for exploring the future of films, television, OTT, gaming, animation, and digital entertainment, setting the stage for innovation, collaboration, and strategic growth within India’s creative economy

 

The two-day conclave will feature a dynamic blend of knowledge sessions, masterclasses, workshops, content markets, and exhibitions, exploring critical aspects of India’s evolving media and entertainment landscape. Key focus areas will include the global influence of Indian cinema, the transformation of television and OTT, innovations redefining broadcasting and music consumption, and India’s rise as a powerhouse in gaming, animation, and VFX. Additionally, discussions on Ease of Doing Business (EoDB) in M&E will address regulatory frameworks and policies, fostering a seamless, growth-driven industry ecosystem.

 

A special segment, PlayNext – Developer’s Day, will delve into gaming, esports, and interactive entertainment, highlighting India’s emergence as a global leader in the AVGC-XR ecosystem.

 

Sandhya Devanathan, Co-Chair, FICCI M&E Committee & VP, Country Head - India, Meta; Arjun Nohwar, Co-Chair, FICCI Media & Entertainment Committee and SVP & Country GM - India & South Asia, Warner Bros. Discovery; and Dr. G.S.K. Velu, Chairman, FICCI Tamil Nadu State Council were the other dignitaries at the inaugural event. Other distinguished industry leaders included Ashish Pherwani, Ravi Kottarakara, Kaarthekeyen Santhanam, Sanjay A. Wadhwa, Ankur Vaish, Shweta Bajpai, Mahesh Shetty, Krishnan Kutty, Ravikant Sabnavis, Munjal Shroff, Vaibhav Chavan, Jakes Bejoy, Bejoy Arputharaj, Ashish Kulkarni, among others.

Ramam Raghavam Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ramam raghavam ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். என்னதான் இந்த படம் telugu வா இருந்தாலும் tamil language ளையும் இன்னிக்கு release ஆகுது. இது வரைக்கும் telugu படங்கள் ல comedian அ பாத்த dhanraj அ ஒரு director அ entry குடுத்திருக்காரு. இவரோட சேந்து samuthirakani , Harish Uthaman, Satya, Pramodhini, Srinivas Reddy, Prithviraj, Sunil, Moksha, னு பல பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். இந்த படத்தோட கதை amalapuram ல நடக்குது. 


Ramam RAghavam Movie Video Review : https://www.youtube.com/watch?v=zz5lDcuQwFA

Dasharatha Ramam அ நடிச்சிருக்காரு  samudrakani . இவரு amalapuram register office ல வேலை பாக்குறாரு. அதோட இவரு honest ஆனா officer யும் கூட. மாசத்துல வர சம்பளத்தை தவிர வேற எந்த காசையும் வாங்க மாட்டாரு. இந்த மாதிரி நேர்மையான officer க்கு மகன் தான் raghava வ நடிச்சிருக்காரு dhanraj . அப்பா நல்லவரா இருந்தாலும் பையன் ரொம்ப கெட்டவனா இருக்காரு. சின்னவயசுல இருந்தே கேட்ட பழக்கத்துக்கு அடிமையிருப்பாரு. வளந்தத்துக்கு அப்புறம் gambling betting னு காச தொலைச்சு நெறய கடன் வாங்கி வச்சிருப்பாரு. என்னதான் தன்னோட பையன் rama க்கு உயிர் நாலும் raghava ஓட கேட்ட பழக்கம் மட்டும் இவருக்கு பிடிக்காது. பையன் ஓவுவுறு வாட்டியும் தப்பு பண்ணும் போது தண்டனை கொடுப்பாரு. தன்னோட பையன் ஓட கெட்ட  பழக்கத்தை மாத்தணும் னு try பண்ணாலும் raghava வ நல்ல வழிக்கு கொண்டு வர முடியல. 

தனக்கு காசு வேணும்னு ஒரு நாலு raghava இவரோட அப்பா sign அ ஒரு document ல போட்டுடுறாரு. இதுனால rama க்கு ஒரு பெரிய பிரச்சனையே வந்துடுது. இதுக்கு மேல பொறுத்தது போதும் னு தன்னோட பையன வீட்டை விட்டு வெளில அனுப்பிடுறாரு. ஒரு பக்கம் addiction இன்னொரு பக்கம் அப்பாவோட punishment , கடன் னு raghav க்கு ஒரே பிரச்சனையா இருக்கு இதுனால ஒரு பெரிய விபேரீத முடிவை  எடுக்கறாரு. அது என்னனா அப்பாவை போட்டு தள்ளனும் னு plan பண்ணி தன்னோட friend truck driver deva வ நடிச்சிருக்க harish uthman யும் இந்த plan ல சேத்துக்கறாரு. அப்பாவை கொன்னை மட்டும் தான் அப்பா பாக்குற வேலையும் தனக்கு கிடைக்கும் அதோட insurance அப்புறம் மத்த சொத்து எல்லாம் வந்துடும் ன்ற நினைப்புல தான் இந்த plan போட்டு வச்சிருப்பாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்தது. பையன் தன்னோட தப்ப உணர்ந்து அப்பாகூட சேந்தரா இல்ல பையன் போட்ட plan ல அப்பா இறந்துட்டாரா ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. 

என்னதான் dhanraj க்கு இது direct பண்ணற முதல் படமா இருந்தாலும் audience க்கு interesting அ இருக்கற மாதிரி emotional ஆனா படத்தை தான் எடுத்துட்டு வந்திருக்காரு. first half அ பாத்தீங்கன்னா normal அ தான் இருக்கும். அதாவுது அப்பா பையன் க்கு நடுவுல நடக்கற சண்டை, raghav ஓட கெட்ட பழக்கம் னு காமிச்சிருப்பாங்க ஆனா interval க்கு அப்புறம் நடக்கற second half தான் படம் சூடு பிடிக்குது னு சொல்லி ஆகணும். தன்னோட அப்பாவை போட்டு தள்ளனும்  னு இவரு போடுற plan னு இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாமே நெறய twist ல லாம் வச்சு ரொம்ப interesting அ இந்த படத்தோட கதையை முடிச்சிருக்காங்க. முக்கியமா கடைசி 20 நிமிஷம் படம் மக்களை கண் கலங்க வச்சரும் அந்த அளவுக்கு emotional அ இருக்கு. அப்பா பையன் sentiment ல வந்த dookudu , nanako prematho போன்ற படங்கள் மாதிரி இல்லாம ரொம்ப fresh அ engaging அ இருக்கற மாதிரி ஒரு concept அ கொண்டு வந்த director க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். 

 இது வரைக்கும் நம்மள சிரிக்க வச்ச dhanraj  இந்த படத்துல அழ வச்சுட்டாரு  னு தான் சொல்லணும். அந்த அளவுக்கு ஒரு serious ஆனா powerful performance அ குடுத்திருக்காரு. samuthirakani ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம் இவரோட நடிப்பு சிறப்பா இருந்தது. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு பிரமாதமா நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது cinematography super அ இருந்தது. அதோட music and bgm  வேற level ல இருந்தது னு தான் சொல்லி ஆகணும். முக்கியமா climax scenes யும் அதுக்கு முன்னாடி வர scenes க்கும் வர bgm அட்டகாசமா இருந்தது. screenplay தான் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். 

மொத்தத்துல இந்த படம் ஆரம்பத்துல ரொம்ப slow அ போனாலும் ஒரு கட்டத்துக்கு மேல விறுவிறுப்பா போகுது. ஒரு நல்ல emotional ஆனா அதே சமயம் suspense நிறைஞ்ச படம் தான் இது. ஒரு good feel movie னு தான் சொல்லணும். கண்டிப்பா இந்த  படத்தை  பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Dragon Movie Review

Dragon Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் expect பண்ணிட்டு இருந்த dragon படத்தோட review  அ தான் பாக்க போறோம். இந்த படத்தை ashwath marimuthu  தான் direct பண்ணிருக்காரு. pradeep யும் anupama தான் lead role ல நடிக்கிறாங்க. இவங்கள தவிர்த்து Kayadu Lohar, George Maryan, Indumathy Manikandan, K. S. Ravikumar, Gautham Vasudev Menon, Mysskin, VJ Siddhu and Harshath Khan. லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். 



ashwath marimuthu ஓட style என்னனு பாத்தீங்கன்னா அவரோட characters தப்பே பண்ணாலும் அவங்கள judge பண்ண மாட்டாங்க. ஒரு ஹீரோ தப்பு பண்ணாலும் judge பண்ணமாட்டாரு அதே சமயம் ஒரு பொண்ணு ஒரு பையன reject பண்ணாலும் அவளை negative அ ஆவும் காட்ட மாட்டாரு.  இவரோட oh my kadavule படம் மாதிரியே இந்த படத்துலயும் magic இருக்குனு தான் சொல்லணும். சொல்ல போன நெறய coincidences நடக்குது. என்ன தான் raghavan அ நடிச்சிருக்க pradeep எக்கச்சக்க தப்புகள் பண்ணாலும் அதா சரிசெய்யறதுக்கான solutions சீக்கிரமா கிடைச்சுடும். characters எடுக்கற முடிவு அதுனால அவங்க face  பண்ணற consequences னு எல்லாமே audience னால connect பண்ணிக்க முடியற மாதிரி தான் கதை போகுது னு சொல்லனும். முக்கியமா படத்தோட second half தான் அட்டகாசமா இருந்தது. 

raghavan dhanapal அ நடிச்சிருக்க pradeep சின்ன வயசுல school ல ரொம்ப நல்ல பையன இருப்பாரு அதோட நல்ல படிக்கற பையனும் கூட. ஆனா இவரை ஒரு பொண்ணு உன்கிட்ட bad boy attitude கிடையாது னு reject பண்ணிடுற. இதுனால college ல bad  boy அ பிரச்சனை குடுக்கற பையன இருக்காரு. இங்க தான் இவரோட பேரு dragon அ வருது. இவருக்கு college ல மட்டும் 48 arrear வச்சிருப்பாரு. அது மட்டும்  கிடையாது friends கிட்ட இருந்து காசு வாங்கி அதா தன்னோட parents க்கு வேலை பாக்குற salary னு சொல்லி ஏமாத்துவாரு. ஆனா இவரு வேலைக்கு போகாம friends ஓட  தங்கி time அ waste பண்ணிட்டு இருப்பாரு. கடைசில college ல keerthi அ நடிச்சிருக்க அனுபமா இவரோட love அ reject பண்ணதுக்கு அப்புறமா தான் reality என்னனு தெரிய வருது. இருந்தாலும் degree certificates அ fake அ ready பண்ணி ஒரு company ல சேந்து promotion க்காக us க்கு அனுப்பி வைக்கறாரு இவரோட boss gautham vasudeva menon . ஆனா அங்க தான் இவரோட college prinicipal myskkin entry குடுக்கறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

drama romance comedy life lessons னு எதுக்குமே பஞ்சம் வைக்காம director இந்த படத்தை கொண்டு வந்திருக்காரு. raghavan ஓட family middle class தான். பையன் நல்ல படிக்கணும் ண்றதுக்காக அவங்க பண்ணற sacrifices எல்லாமே காமிச்சிருக்காங்க. இந்த காலத்து பசங்க ஒரு சிலவங்க பெத்தவங்க படுற கஷ்டத்தைப்பத்தி தெரியாம கெத்தா சுத்துறோம் ன்ற பேர்ல வாழக்கையை கெடுத்தது இருக்காங்க னே சொல்லலாம். parents கிட்ட காசு இல்லனு சொல்லற அவங்களுக்கு நல்ல படிச்சு முன்னேறி வர தெரில ன்றது தான் உண்மை. love failure ஆச்சுன்னா வேற second chance கிடைக்காதா ? cheat பண்ணி தான் successful ஆகணும்னா ன்ற கேள்விகளை எழுப்புர விதமா இருக்கு னு தான் சொல்லணும். 

இந்த காலகட்டத்துல இருக்கற பசங்களுக்கு ஏத்த மாதிரி pradeep ஓட friends பட்டாளம், parents , romantic song எல்லாமே super அ இருந்தது. screenplay தான் அட்டகாசமா இருந்தது. ரொம்ப emotional  அ powerful அ இருந்தது னு தான் சொல்லணும். ஒரு dialouge அ பாத்தீங்கன்னா ஒரு தப்ப பண்ணிட்டு அதா easy அ kadanthrulam  நும் நினைக்கிறோம் ஆனா அது தொடர்ந்து கிட்டே இருக்கு ல ன்ற dialouges ல super  அ இருந்தது. இந்த படத்தோட highlight ஆனா விஷயமே கடைசில pradeep யும் myskkin யும் சந்திக்கிறது தான். இவங்க ரெண்டு பேரோட characters யும் ரொம்ப beautiful அ director கொண்டு வந்திருக்காரு. இவங்களோட dialogues இல்ல meetups எல்லாமே to the point இருக்கும் தேவையில்லாத dialogues இருக்காது. 

leon james ஓட songs and bgm இந்த படத்துக்கு top notch அ இருக்கு. அதோட நெறய scenes அ ஒரு படி மேல கொண்டு போயிருக்குனு தான் சொல்லணும். காசு முக்கியம் தான் ஆனா எல்லாத்தயும் விட அது தான் பெருசா ன்ற கேள்வி இந்த படத்தை பாத்துட்டு வரவங்களுக்கு கண்டிப்பா தோணும். ashwath ஓட o my kadavule போலவே இந்த படத்லயும் அவரோட magic அ use பண்ணிருக்காரு. இந்த படமும் ஒரு fun அ emotional அ starting ல இருந்து ending வரைக்கும் engaging அ இருக்கற மாதிரி குடுத்திருக்காரு. சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family அண்ட் friends ஓட போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. ஒரு நல்ல entertaining ஆனா படம் தான் டிராகன்.

First Single ‘Mugai Mazhai’ from Tourist Family Starring Sasikumar and Simran Released

 *First Single ‘Mugai Mazhai’ from Tourist Family Starring Sasikumar and Simran Released !*



Chennai: The first single ‘Mugai Mazhai’ from the upcoming Tamil film Tourist Family has been officially released, along with its lyrical video. Starring Sasikumar and Simran in lead roles, the film is directed by debutant Abishen Jeeveen and promises to be a feel-good family entertainer.


The movie features an ensemble cast including Yogi Babu, Mithun Jayashankar, Kamalesh, M.S. Bhaskar, Ramesh Thilak, Bhagavathi Perumal (Bucks), Ilango Kumaravel, and Sreeja Ravi, among others. Aravind Viswanathan handles cinematography, while Shaan Rahman has composed the music. The film’s editing is managed by Bharath Vikraman, and art direction is helmed by Rajkamal.


Produced by Million Dollar Studios and MRP Entertainment, the film is backed by producers Nasareth Baslian, Mahesh Raj Baslian, and Yuvaraj Ganesan. The first look and title announcement video of Tourist Family had already created a buzz among fans, raising expectations for the film.


The newly released first single, ‘Mugai Mazhai’, features lyrics penned by Mohan Rajan and is sung by Shaan Rahman and Saindhavi. The melodious track has been well-received by music lovers, adding to the excitement surrounding the film’s release.


With a compelling storyline and a strong cast, Tourist Family is set to be a promising addition to Tamil cinema’s family entertainer genre.


https://youtu.be/9X124-CoycE

சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*

 *சசிகுமார் - சிம்ரன் இணைந்து நடிக்கும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* 



தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.


https://youtu.be/9X124-CoycE

பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து

 *பாரதிராஜா - நட்டி நட்ராஜ் - ரியோ ராஜ் - சாண்டி மாஸ்டர் - ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* 





சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B  இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், 'ஆடுகளம்' நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் - தினேஷ் - சுபேந்தர் - ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.


தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் 'பிக் பாஸ்' முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் பாலா சீதாராமன் வரவேற்று பேசுகையில், '' திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என  எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து 'நிறம் மாறும் உலகில்' எனும் இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் , மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.  நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம். 'நிறம் மாறும் உலகில்' திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ் பேசுகையில், ''இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் வியப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய முதல் திரைப்படம். என்னுடைய முதல் திரைப்படமாக 'நிறம் மாறும் உலகில்'  அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இதில் நடித்திருக்கும் பாரதிராஜா ஐயா , ரியோ அண்ணன், சாண்டி அண்ணன், நட்டி சார் உள்ளிட்ட பலருக்கும் இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும் ,, தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


என்னிடம் இருக்கும் இசைத் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்திய நடிகர் ரியோ ராஜுக்கு நன்றி. இயக்குநர் பிரிட்டோ என்னுடைய நண்பர். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது அவரிடம் சில இசையமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறிக் கொண்டே இருந்தேன். அனைத்தையும் கேட்டுவிட்டு, இறுதியில் 'நீ தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்' என சொன்னார். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார். 


நடிகை ஜீவா சுப்பிரமணியம் பேசுகையில், '' இது என்னுடைய 25 ஆவது படம். இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பிரிட்டோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் போது எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எமக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. 


இந்தத் திரைப்படம் சொல்ல முடியாத ஒரு ரணத்தை சொல்ல முயற்சிக்கிறது. அது என்ன? என்பதை மார்ச் ஏழாம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் பிரிட்டோ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


நடிகை ஆதிரா பேசுகையில், '' இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரிட்டோவின் அன்பிற்காக அனைத்து நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பொறுமையுடன் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். இதற்காகவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது'' என்றார்.


நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில், '' இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா?  என கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம். 


இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது. '' என்றார். 


நடிகர் ஏகன் பேசுகையில், '' நண்பர்களாக இணைந்து திரைப்படத்தில் பணியாற்றுவது உண்டு. இந்த திரைப்படத்தில் அனைவரும் சகோதரர்களாக இணைந்து பணியாற்றிருக்கிறோம். சகோதரர்களாக இணைந்து பணியாற்றினால்.. அது அம்மாவை பற்றிய படமாக தான் இருக்கும். இது அம்மாவை பற்றிய படம். மார்ச் ஏழாம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் தனஞ்ஜெயன் பேசுகையில், ''  இந்தப் படத்தின் முன்னோட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கம்பீரமாகவும், புது வடிவத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் அவர் காந்த குரலில் அட்டகாசமாக கதையை சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ஏதாவது ஒரு விசயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அது இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நட்டி நட்ராஜ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜுக்கும் நன்றி. சாண்டி மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். 'மதிமாறன்' எனும் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன். '' என்றார். 


நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில்,'' இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம்.  ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாக படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தை பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தை பார்த்த பிறகு, நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்.. என நடித்து ரசிகர்களின் கவனத்தையும், அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான். 


முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது 'இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் ' என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். '' என்றார். 


'பிக் பாஸ்' முத்துக்குமரன் பேசுகையில், '' இசை வெளியீட்டு விழா என்று சொன்னார்கள். இங்கு இசை வெளியீட்டு மாநாடாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கு ஏற்படுகிறது என்றால்... இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகர்களின் பட்டியலை பார்க்கும்போது ஏற்படுகிறது. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், லிஸி ஆண்டனி.. என  நீளும் பட்டியலே இதற்கு சாட்சி. ஒரு படத்தில் கதை நாயகர்கள் இருப்பார்கள் கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற திரைப்படமாக இது இருக்கிறது. இதனை உருவாக்கிய இயக்குநர் பிரிட்டோவின் ஆளுமையை நினைத்து பிரமிக்கிறேன். இந்த கதையில் எப்படி பிரபலங்கள் நிரம்பி வழிகிறார்களோ... அதே போல் இப்படம் வெளியான பிறகு திரையரங்கிலும் ரசிகர்கள் நிரம்பி வழிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கு ஊடகங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். 


தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா பேசுகையில், ''நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 


இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், ''  இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் வருகை தந்து பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். 


இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இந்த திரைப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றி கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதலில் தயங்கினாலும் பிறகு பணிகள் நடைபெற நடைபெற என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது. 


எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பை பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


ரியோ என் நண்பன். அவருடன் இன்றும் இணைந்து பயணிக்கிறேன். இப்படத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


'லியோ'விற்கு பிறகு சாண்டி மாஸ்டரை இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தக் கதை நரேட்டிவ் ஸ்டோரி. யோகி பாபுவில் தொடங்கி வித்தியாசமான உச்சகட்ட காட்சி வரை பயணிக்கும். இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். 


இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான்...அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான  கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் அதனை பார்த்து ரசிப்பீர்கள். 


மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம்.  இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார். 


நடிகர் சாண்டி மாஸ்டர் பேசுகையில், '' இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பை பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்பு பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். 


நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் 'லியோ'விற்கு பிறகு என்னை தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன். 

இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? எனக் கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. 


இந்தப் படத்தில் நடிகை ஐரா கிருஷ்ணன் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. 


'நிறம் மாறும் உலகில்' மார்ச் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், '' நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை - இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன். 


ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார்.


நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம். 


இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், '' அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்துதான் சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது... கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். 


இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். 


இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.  


இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையை காண்பித்து இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பார்கள். 


நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 


மார்ச் 7ஆம் தேதி ' நிறம் மாறும் உலகில்' வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்

கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்*




இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC - South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. 


மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய திரு. கமல்ஹாசன், தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையைப் பயன்படுத்திக்கொண்டு நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.  மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லற்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழ்த்திரையுலகிற்கு நிவாரணமாக அமையும் என்றார். 


தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு துணை முதல்வர், கலைஞானி அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலனை செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார். தவிர, பனையூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக்கலைஞர்களுக்கான குடியிருப்பு அமையவிருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார். 


இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்த் திரையுலகம் சார்பாக தனது நன்றிகளை திரு. கமல்ஹாசன் மேடையிலேயே தெரிவித்தார்.

Nilavuku En Mel Ennadi Kobam Movie Review

Nilavuku En Mel Ennadi Kobam  Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Pavish, Mathew Thomas, Anikha Surendran, Priya Prakash Varrier, R. Sarathkumar, Venkatesh Menon, Rabiya Khatoon and Ramya Ranganathan நடிச்சிருக்க இந்த படம் இன்னிக்கு release ஆகியிருக்கு. Wunderbar Films and RK Productions தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. முதல இந்த படத்தை soundarya rajinikanth ஓட direction ல dhanush தான் lead role ல நடிக்கிற மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் dhanush தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. அதோட இவரு direct பண்ணற மூணாவுது படம் இது. சோ வாங்க படத்தோட கதைக்குள்ள போவோம். 

Nilavuku En Mel Ennadi Movie Video Review: https://www.youtube.com/watch?v=n7QNoGocy50

prabhu வ நடிச்சிருக்க pavish க்கு love failure ஆயிடுது அதுனால ரொம்ப depressed அ இருக்காரு. இவரோட family prabhu வை இந்த phase ல இருந்து வெளில கொண்டு வரணும் னு முடிவு பண்ணறாங்க அதுனால இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் னு முடிவு பண்ணறாங்க. கடைசியா ஒரு பொண்ண fix  பண்ணி prabhu வ அந்த பொண்ண பாக்கறதுக்கு கூட்டிட்டு போறாங்க. என்னதான் prabhu க்கு இதுல இஷ்டம் இல்லனாலும் parents க்காக போய் அந்த பொண்ண சந்திக்கறாரு. அப்போ தான் இவரு priya prakash varrier அ சந்திக்கறாரு. இவங்க prabhu ஓட school mate அ இருப்பாங்க. இவங்க கொஞ்சம் நாள் பேசுனத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா னு முடிவு பண்ணிக்கறாங்க. correct அ இந்த marriage க்கு ok னு சொல்ல வரும்போது prabhu ஓட ex girlfriend ஆனா nila வை நடிச்சிருக்க anikha surendran ஓட கல்யாண invitation இவருக்கு வந்து சேருது. 


இப்போ அப்படியே நம்ம இவங்களோட flashback story க்கு போவோம். chef அ ஆகணும் ன்ற ஒரு goal ஓட இருக்காரு prabhu அப்புறம் ஒரு பெரிய பணக்கார வீட்டு பொண்ண வராங்க nila . இவங்க ரெண்டு பேரும் சந்திச்சு love பண்ண ஆரம்பிக்கறாங்க. prabhu ஓட வீட்ல இவங்க love க்கு ok சொன்னாலும் nila ஓட அப்பாவான sarathkumar க்கு இவங்க relationship பிடிக்கல அதுனால இவங்களுக்கு red signal காமிக்கறாரு. prabhu வவும் nila வும் ஏன் பிரிஞ்சாங்க ? இவங்க ரெண்டு பேரும் சேந்தாங்களா இல்ல தன்னோட வீட்ல பாத்த பொண்ணோட கல்யாணம் பண்ணிகிட்டாரா prabhu ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.  


இது ஒரு simple  ஆனா love story  தான். ரெண்டு பேருக்கும் இருக்கற relationship இதை எதிர்க்கிற parents னு நமக்கு ரொம்ப பழக்கப்பட்டதா இருந்தாலும் கதையை எடுத்துட்டு வந்த விதம் ரொம்ப அழகா இருந்தது. first  half னு பாக்கும் starting ஏ love failure song ல இருந்து தான் ஆரம்பிக்கறாங்க. அதுக்கு அப்புறமா prabhu and nila ஓட love story  எப்படி ஆரம்பிக்குது ன்ற flashback portions வருது. prabhu chef ண்றதுனால nila க்கு சமைச்சு குடுத்து தான் impress பண்ணுவாரு. அதுலயும் night  time ல கடல்கரைல nila க்கு கருவாடு குழம்பு வச்சு சாப்புட வைப்பாறு. prabhu ஓட friend அ வராரு karthik அ நடிச்சிருக்க mathew thomas . இவரை மலையாள படங்களை நடிச்ச ஒரு famous ஆனா actor . இவரோட comedy portions எல்லாமே ரசிக்கிற மாதிரி இருந்தது. அப்படியே ரெண்டாவுது பாதி க்கு போனோம் ந nila ஓட wedding க்கு போறாரு prabhu எப்படியாது நம்மகிட்ட அவ வந்துடுவா ன்ற நம்பிக்கை ல போறாரு. இங்க தான் wedding planner அ வராங்க ramya ranganathan இவங்களோட portions யும் super அ இருந்தது. என்ன தான் golden sparrow song நல்ல vibe பண்ணிட்டு இருந்தாலும் theatre version ல பாக்கும் போது வேற level ல இருந்தது. climax அ ரொம்ப emotional அ முடிக்காம comedy ரகமா முடிஞ்சுது super அ இருந்தது. lovers அ சேத்து வைக்கிற cupid அ dhanush cameo role ல வந்துட்டு போயிருக்காரு. 


இந்த படத்துக்கு ஒரு சில விஷயம் ரொம்ப super அ இருந்தது. prabhu க்கும் karthik க்கும் இருக்கற friendship scenes எல்லாமே அட்டகாசமே இருந்தது. இந்த படத்துக்கு cinematography leon britto எல்லா scenes யுமே அழகா capture பண்ணிருக்காரு. இதுல வர locations எல்லாமே அழகா இருந்தது. அடுத்ததா G  V prakash ஓட bgm and music தான். songs மட்டும் இல்ல இவரோட bgm  யும் நெறய scenes அ மேல தூக்கி விடுற மாதிரி அமைச்சிருக்கு.  


என்னதான் இந்த படத்துல முக்காவாசி பேரு புதுசா இருந்தாலும் இவங்களுக்கு endha background யும் கிடையாது னு சொல்லிட முடியாது. pavish , kasthuri raja ஓட குடும்பத்துல இருந்தது வர மூணாவுது generation நடிகர் னு தான் சொல்லணும். anikha  surendran , priya  prakash varrier ஏற்கனவே successful  ஆனா படங்களை குடுத்திருக்காங்க. Ramya, Rabiya, and Venkatesh ல பாத்தீங்கன்னா social media , dancers அதோட modelling ல இருக்கறவங்க. அதோட mathew  thomas மலையாள சினிமா ல வளந்துட்டு வர new generation actor . இந்த மாதிரி ஒரு strong ஆனா casting அ தான் இந்த படத்துல நடிக்க வச்சிருக்காரு dhanush . அவங்களோட role அ புரிஞ்சிகிட்டு தன்னோட நடிப்பை பக்கவா குடுத்திருக்காங்க. 


ஒரு நல்ல லவ் ஸ்டோரி பாக்கணும்னா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. கண்டிப்பா உங்க family and  friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.