Featured post

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’

 *புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!* மகிழ் புர...

Saturday, 19 September 2026

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’

 *புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!*





மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில்,  உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’.

இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.


சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.


மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார்,  அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். திரைப்படத்திற்காக வைரமுத்து அவர்கள் அழகான வரிகளுடன் சிறப்பான பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். இப்படதை சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.


‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.  இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆஸ்கார் ஐ நோக்கி இசைஞானி இளையராஜா

 *ஆஸ்கார் ஐ நோக்கி இசைஞானி இளையராஜா*





*இசைஞானி இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த்திரைப்படம் “அந்தோனி” யின் ஆஸ்கார் நோக்கிய பயணம்* 


ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ் அவர்களின் தயாரிப்பிலும், கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்ற வெற்றித்திரைப்படமாக மாறியிருந்தது.


திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala போன்ற பல முன்னனி OTT தளங்களில் திரைப்படம் வெளியாகியிருந்தது. 


இந்நிலையில் ‘அந்தோனி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தினூடாக 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கார் விருது விழாவிற்கான தேர்வுக்குழுவிற்கு அனுப்பியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கின்றனர். 


உலமறிந்த மாபெரும் இசைமேதை The Maestro என்ற அழைக்கப்படும் இசைஞானி இளையராஜாவின் இசையில் வரலாற்றில் முதல் இலங்கை தமிழ் திரைப்படம் எனும் பெருமைய கொண்ட இப்படைப்பிற்கு உலகளாவிய ரீதியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Oram Po, Oram Po!!! DOROTHY VANDI VARUDHU!

DOROTHY VANDI VARUDHU!


For Over Four and a Half Decades, the Maestro’s Music Has Travelled Faster Than Light




Oram Po, Oram Po!!! DOROTHY VANDI VARUDHU!


Ilaiyaraaja’s Music Travels With the Caravan Across Tamil Nadu Ahead of the September 25 Worldwide Release


The promotions for Karthik Subbaraj’s much-awaited Dorothy have taken an exciting turn with a special Lorry Road Trip flagging off from Madurai, bringing the world of the film—and the music of Maestro Ilaiyaraaja—directly to audiences across Tamil Nadu.


For over four and a half decades, the sound of Maestro Ilaiyaraaja’s music has travelled faster than light, crossing generations, geographies and languages. Now, that music is travelling with Dorothy as the film’s specially designed caravan makes its way across Tamil Nadu.


Inspired by an integral element of Dorothy, the caravan is not merely part of the film’s promotional campaign; it carries the soundscape of Maestro Ilaiyaraaja’s Original Score along with it. As it journeys through towns and cities, Ilaiyaraaja’s music will travel with Dorothy, creating a moving cinematic experience for audiences even before the film reaches theatres.


The road trip was flagged off in Madurai with Rishikanth, one of the film’s lead actors, riding the lorry that forms an important part of the film’s world. The journey will travel through Madurai, Theni and Dindigul today, before moving towards Pollachi and Coimbatore tomorrow, taking the spirit of Dorothy directly to audiences across these locations.


From Madurai, the caravan will travel to Theni, the birthplace of Maestro Ilaiyaraaja, before proceeding to Dindigul, where portions of Dorothy were filmed. The route therefore adds special significance to the promotional journey, connecting the film’s world, its shooting locations and the music of the legendary composer.


With Ilaiyaraaja’s Original Score accompanying the journey, the Dorothy caravan becomes more than a promotional vehicle—it becomes a moving soundtrack for the film’s journey towards its worldwide theatrical release.


Since its announcement and launch, Dorothy has steadily generated considerable interest, further strengthened by its journey across international film festivals and screenings. The recently released trailer has amplified the anticipation, offering audiences a glimpse into the distinctive world created by Karthik Subbaraj.


Karthik Subbaraj’s body of work has consistently moved between genre-driven storytelling and unconventional dramatic spaces. Dorothy continues this distinctive cinematic approach, with the trailer offering glimpses of its characters, atmosphere and narrative world. Early audiences who have experienced the film have responded enthusiastically to its storytelling, performances and atmosphere, adding further momentum ahead of its worldwide theatrical release.


ILAIYARAAJA’S MUSIC TAKES THE JOURNEY FORWARD


Adding another major dimension to Dorothy is its music. The Original Score by Maestro Ilaiyaraaja has emerged as one of the film’s most anticipated elements.


The recently presented music and OST have generated considerable excitement among music lovers and cinema enthusiasts. The Maestro’s musical presence brings an additional emotional layer to Karthik Subbaraj’s world, making the score an integral part of the anticipation surrounding the film.


Now, with the music travelling along with the Dorothy caravan, audiences across Tamil Nadu will get to experience a part of the film’s musical identity even before September 25.


The film stars Keerthy Suresh, Sananth and Rishikanth in the lead roles, with Muthukumar also part of the cast.


With the unique Lorry Road Trip now underway and anticipation building around its trailer, performances and Ilaiyaraaja’s Original Score, Dorothy is gearing up for a worldwide theatrical release on September 25, 2026.


Written and directed by Karthik Subbaraj, Dorothy is produced by Jyoti Deshpande, Guneet Monga Kapoor and Achin Jain, and presented by Jio Studios and Sikhya Entertainment. The film is produced by Sikhya Entertainment and Dhammam Films.


S. Thirunavukkarasu is the Director of Photography, Ganesh Siva is the Editor, and Pavan Narendra serves as Executive Producer, with additional screenplay by Saravanan Chandran.


The technical crew includes Action Director Dinesh Subbarayan, Choreographer Sherif M, Costume Designer Praveen Raja, Sync Sound Designer Thomas Kuriyan and Production Designer Kumar Gangappan.

ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!

 *ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!*




*’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ‘டோரதி’யின் கேரவன்!*


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து ஸ்பெஷலான லாரி ரோடு ட்ரிப் தொடங்கியுள்ளது. திரைப்படத்தின் உலகையும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.


கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பயணித்து வருகிறது. தலைமுறைகள், புவியியல் எல்லைகள், மொழிகள் என அனைத்தையும் கடந்து அனைவருடனும் கலந்துள்ள அந்த இசை, இப்போது ‘டோரதி’ திரைப்படத்திற்கும் சிறப்பு சேர்த்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேரவன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறது.


‘டோரதி’ திரைப்படத்தின் கதையுலகில் முக்கியமான இடம்பெறும் ஒன்றால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், திரைப்பட விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இல்லாமல், மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஒரிஜினல் ஸ்கோர் இசையையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறது. நகரங்கள் மற்றும் ஊர்கள் வழியாக இந்தக் கேரவன் பயணிக்கும்போது, இளையராஜாவின் இசையும் ‘டோரதி’யுடன் இணைந்து பயணிக்கிறது. இதன் மூலம் திரைப்படம் திரையரங்குகளை அடைவதற்கு முன்பே ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரும். மதுரையில் தொடங்கிய இந்த ரோடு ட்ரிப் நிகழ்வில், திரைப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ரிஷிகாந்த்,  இந்த லாரியை ஓட்டியபடி பயணத்தைத் தொடங்கி வைத்தார்.


இன்று மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் வழியாகப் பயணிக்கும் இந்த கேரவன், நாளை பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் நோக்கிச் செல்கிறது. மதுரையில் இருந்து புறப்படும் இந்தக் கேரவன், மேஸ்ட்ரோ இளையராஜா பிறந்த ஊரான தேனி வழியாகச் சென்று, பின்னர் ‘டோரதி’ திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட திண்டுக்கல் பகுதிக்குச் செல்கிறது. எனவே, திரைப்படத்தின் கதையுலகம், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை என ரசிகர்களை கவர இருக்கிறது. 


’டோரதி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் சிறப்புத் திரையிடல்களில் திரைப்படம் பங்கேற்றிருப்பதும் சமீபத்தியில் வெளியான படத்தின் டிரெய்லரும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


‘டோரதி’ திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாக இசைஞானி இளையராஜாவின் இசையும் அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இசை மற்றும் ஒரிஜினல் சவுண்ட் டிராக், இசை ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேஸ்ட்ரோவின் இசை, கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ள உலகிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. 


இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த் மற்றும் ரிஷிகாந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை வழங்குகின்றன. சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.


எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், பவன் நரேந்திரா நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை சரவணன் சந்திரன் எழுதியுள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஆக்ஷன் இயக்குநர் தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிஃப் எம்., ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, சிங்க் சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் குமார் கங்கப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி*

 *‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி*












செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’


ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’, ‘கலைவானியே’ பாடல்கள்.


ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்க 2' திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் ‘மீசைய முறுக்கு 2’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் பிரமாண்டமான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது.


நிகழ்ச்சியில் பேசிய படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது:


“இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு, மீண்டும் ஒரு திரைப்படத்தின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகக் குறுகிய காலத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, நமது தயாரிப்பாளர் சுந்தர் சி சார் அவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒரு தருணம் என்பதால், இந்த நிகழ்வு எனக்கு கூடுதல் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது.”


‘மீசைய முறுக்கு’வுக்கும் ‘மீசைய முறுக்கு 2’வுக்கும் உள்ள வித்தியாசம்!


முதல் பாகத்திலிருந்து இரண்டாம் பாகம் எவ்வாறு மாறுபடுகிறது என்பது குறித்து பேசிய ஆதி கூறியதாவது:


“‘மீசைய முறுக்கு’ என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயோபிக். ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது. இது இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது.”


இசையில் ஒலிக்கும் கானா கலைஞர்களின் வாழ்க்கை!


‘மீசைய முறுக்கு 2’ படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கானா கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்கிறது.


இதுகுறித்து ஆதி மேலும் கூறியதாவது:


“குறிப்பாக, கானா கலைஞர்கள் தங்களது போராட்டங்கள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பயணங்களை பாடல்களாக வெளிப்படுத்தி, தங்களது கலையின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களது கதைகளும், அவர்கள் வாழும் உலகமும் இந்தப் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. அவர்களது குரலையும் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.”


மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!”


‘மீசைய முறுக்கு’ முதல் பாகத்தில் தனது தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவையும், இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் தந்தை கதாபாத்திரத்தையும் குறித்து ஆதி கூறியதாவது:


“முதல் பாகத்தில் எனது தந்தை கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த விவேக் சாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தந்தை கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் மாஸ்டர்தான் சரியான தேர்வு என்று நான் நினைத்தேன்.”


பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட விதம் குறித்தும் ஆதி பகிர்ந்துகொண்டார்:


“ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு சற்று தயக்கம் இருந்தது. ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அவருக்கு மிக முக்கியமான இடம் கிடைக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.”


பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் ‘லைலா சிங்’!


‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் கதாநாயகியாக கெட்டிகா சர்மா நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ‘லைலா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் நடனக் கலைஞராக அவர் தோன்றுகிறார்.


இசை, நடனம், லட்சியம் மற்றும் காதல் என வெவ்வேறு உலகங்களை ஒன்றிணைக்கும் கதைக்களமாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகியுள்ளது. இளமைத் துடிப்புடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களோடு, இசைக் கலைஞர்களின் உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களையும் இப்படம் பதிவு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


ரசிகர்களைச் சந்திக்க வருகிறது ‘மீசைய முறுக்கு 2’ படக்குழு!


செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மீசைய முறுக்கு 2’ படத்திற்கான புரமோஷன் பயணம் தொடங்கவுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் படக்குழுவினர் ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளனர்.


தனது திரையுலகப் பயணத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஆதி கூறியதாவது: “கனவுகளை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு இந்தத் துறைக்குள் வந்தவன் நான். இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த, என்னைக் கேள்வி கேட்ட, விமர்சித்த, அதே நேரத்தில் ஊக்கப்படுத்திய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பயணத்தில் நீங்கள் அனைவரும் முக்கியமான ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள்.”


“இந்தப் படத்தை உருவாக்குவதற்கும், மக்களிடம் கொண்டு செல்வதற்கும் உறுதுணையாக இருந்த சுந்தர் சி சார் மற்றும் குஷ்பு மேடம் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது.”


இசையை மையமாகக் கொண்ட கதை, வண்ணமயமான கதாபாத்திரங்கள், காதல், நடனம், இளமை, போராட்டம் மற்றும் கனவுகள் என பல்வேறு உணர்வுகளை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’, இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் கனவுகளையும் எல்லைகளைக் கடந்து உலக ரசிகர்களிடம் கொண்டு செல்ல தயாராகியுள்ளது.


ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ – செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!

MEESAYA MURUKKU 2’ IS A GLOBAL STORY THAT CELEBRATES THE LIVES, STRUGGLES AND DREAMS OF MUSICIANS – HIPHOP TAMIZHA ADHI

 *‘MEESAYA MURUKKU 2’ IS A GLOBAL STORY THAT CELEBRATES THE LIVES, STRUGGLES AND DREAMS OF MUSICIANS – HIPHOP TAMIZHA ADHI*












*Hiphop Tamizha Adhi’s highly anticipated directorial venture arrives in cinemas on September 25; songs already creating a strong buzz among music lovers.*


The much-awaited ‘Meesaya Murukku 2’, written and directed by Hiphop Tamizha Adhi, is gearing up for its worldwide theatrical release on September 25. With its vibrant music, youthful energy and an emotionally rooted story, the film has already generated considerable anticipation among audiences.


The songs from the film - ‘Aura 10/10’, ‘Pappali Pazhamey’, ‘Goindhamma’, ‘Adi Podi’ and ‘Kalaivaaniye’, have struck a chord with music lovers, further amplifying the excitement surrounding the film.


A press meet for ‘Meesaya Murukku 2’ was held in Chennai, ahead of the film’s release and the commencement of its promotional tour.


Speaking at the event, Hiphop Tamizha Adhi said: "After a two-year world tour, I am extremely happy to meet you all again through a film. Before embarking on any new beginning, I would like to express my gratitude to the press and media fraternity. I also extend my heartfelt thanks to everyone who made this press meet possible at such short notice. This is especially significant because it carries an important sentiment for our producer Sundar C sir.”


Explaining how ‘Meesaya Murukku 2’ differs from the first instalment, Adhi said: 


“‘Meesaya Murukku’ was a biopic based on my own life. But ‘Meesaya Murukku 2’ is a much broader and more universal story. It is a global story about music, musicians and the lives they lead. It explores the dreams, struggles, journeys and emotions of people who choose music as their way of life.”


One of the film’s significant themes is the world of Gana musicians and artistes, whose music often emerges from their lived experiences.


“In particular, the film becomes an important record of Gana artistes who express their struggles, experiences and journeys through songs and make a living through their art. Their stories and the world they come from are an important part of this film,” he added.


Speaking about the father character in the film, Adhi acknowledged the emotional significance of the late Vivek sir, who played his father in the first part. 


“No one can ever fill the place of the late Vivek sir, who played the father in the first part. However, ‘Meesaya Murukku 2’ moves through three different time periods, and there is a very important father character in this story as well. I felt that Baba Bhaskar Master was the right person for this role.”


Adhi further revealed that Baba Bhaskar initially had reservations about taking up the role, but eventually embraced the character with conviction. “He was slightly hesitant initially, but he trusted me and went ahead with the role. He has performed extremely well. I genuinely believe that after this film, he will earn a significant place in Tamil cinema as an actor.”


The film also introduces a new dimension through its female lead, with Ketika Sharma playing Laila Singh, a dancer who travels to Chennai from Punjab.


The contrasting worlds of music, dance, ambition and love come together in ‘Meesaya Murukku 2’, promising audiences an energetic yet emotionally grounded cinematic experience.


The film’s promotional tour is set to commence with events across Coimbatore, Madurai and Chennai, taking the team closer to audiences in the run-up to the theatrical release.


Concluding his address, Hiphop Tamizha Adhi expressed his gratitude to the press, media and the producers who have been part of his journey: “I came into this industry with nothing but dreams. I express my heartfelt gratitude to all the press and media friends who have supported me, questioned me, criticised me and encouraged me throughout this journey. I am also immensely thankful to Sundar C sir and Khushbu ma’am, whose support and guidance have helped shape this film and bring it to audiences.”


With its music-driven narrative, colourful characters and a story that aims to transcend geographical boundaries, ‘Meesaya Murukku 2’ is poised to bring the world of musicians and their dreams to the big screen on September 25.

மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

 *மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!*







தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு நம் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.


செப்டம்பர் 25-ஆம் தேதி ‘லெனின் பாண்டியன்’ திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ரசிகர்களையும், திரையரங்கு நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், படத்தின் கதாநாயகன் தர்ஷன் கணேசன் புரமோஷன் பணிகளுக்காக மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த வரவேற்பு படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.


மதுரையில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசிய தர்ஷன் கணேசன், “சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நான் முதன்முதலாக நடித்து வெளிவரும் ‘லெனின் பாண்டியன்’ இந்த மாதம் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. அதன் புரமோஷனுக்காக முதல்வெளியூர் பயணமாக மதுரை வந்தேன். மதுரை ஊர், அந்த மக்கள், அந்த வரவேற்பு எல்லாமே பிரமாதமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீதும் தங்களது குடும்பத்தின் மீதும் மதுரை மக்கள் பல ஆண்டுகளாக வைத்திருக்கும் அன்பை நேரில் உணர்ந்ததாக கூறியுள்ள தர்ஷன், அந்த அன்பை அதே பாசத்துடன் தன் மீதும் அவர்கள் காட்டியது தன்னை நெகிழச் செய்ததாக தெரிவித்துள்ளார். “வீரத்தின் ஊர் மதுரை. மீனாட்சி அம்மனின் ஊர் மதுரை. அப்படிப்பட்ட மண்ணில் என் கலைப் பயணத்தைத் தொடங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தன்னை சந்தித்த பலரும் தனது குடும்பத்தின் பல தலைமுறையினருடனான தங்களது பழைய தொடர்புகளை நினைவுகூர்ந்து பேசியதாகவும் தர்ஷன் தெரிவித்துள்ளார். “தம்பி, உங்கள் தாத்தாவோடு இருந்தோம், உங்கள் அப்பாவோடு இருந்தோம், சித்தப்பாவோடு இருந்தோம், அண்ணனோடும் இருந்தோம்… இனி உங்களோடும் கண்டிப்பாக இருப்போம்” என்று பலர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், சிலர் தன்னை பார்த்தவுடன் “அப்படியே ஐயாவைப் பார்த்த மாதிரி இருக்கீங்க” என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


அந்த வார்த்தைகள் தனக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி மிகப்பெரிய பொறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள தர்ஷன், அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு நல்ல நடிகன் என்பதை தன்னைத் தானே நிரூபிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மதுரையில் பலர் தன்னை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அன்பைப் பகிர்ந்ததோடு, ‘லெனின் பாண்டியன்’ படத்தை கண்டிப்பாக பார்ப்போம் என்று உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


செப்டம்பர் 19-ஆம் தேதி மதுரை சுகப்ரியா திரையரங்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, தனது கலைப் பயணத்தின் அழகான தொடக்கமாக மனதில் என்றும் இருக்கும் என்றும் தர்ஷன் தெரிவித்துள்ளார். சுகப்ரியா திரையரங்கின் மேலாளர் மற்றும் அங்கிருந்த அனைவரும் அளித்த அன்பான வரவேற்பும் இந்த அனுபவத்தை மேலும் சிறப்பாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “மதுரை எனக்கு ஒரு தொடக்கத்தை மட்டும் தரவில்லை. ஒரு நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் என் பயணம் தொடர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.


‘லெனின் பாண்டியன்’ படத்தில் தர்ஷன் கணேசனுடன் பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு, பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.


T.G. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். D.D. பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு A.M. எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரான் இராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தளபதி தினேஷ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். அதூரி ஜெய்குமார் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.


இந்நிலையில், ‘லெனின் பாண்டியன்’ படத்தின் புரமோஷன் பணிகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் தர்ஷன் கணேசனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. குறிப்பாக சிவாஜி கணேசன் குடும்பத்தின் அடுத்த தலைமுறை நடிகராக தர்ஷன் மீது ரசிகர்கள் காட்டியிருக்கும் அன்பும், அவருடன் தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட விதமும் கவனம் பெற்றுள்ளது.


மாறுபட்ட கதைக்களம், அனுபவம் வாய்ந்த நடிகர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பும் ரோஜா, கங்கை அமரனின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் புதிய தலைமுறை கதாநாயகனாக அறிமுகமாகும் தர்ஷன் கணேசன் என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’, செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தர்ஷன் கணேசனின் கலைப் பயணத்தில் முதல் படமாக வெளியாகும் இப்படம், வெளியீட்டுக்கு முன்பே உருவாக்கியுள்ள எதிர்பார்ப்புடன் திரைக்கு வரவுள்ளது.

The Love Received in Madurai… Expectations Rise for ‘Lenin Pandian’!*

*The Love Received in Madurai… Expectations Rise for ‘Lenin Pandian’!*







Sathya Jyothi Films, one of the leading production houses in Tamil cinema, known for producing quality films and bringing diverse stories to the screen over the years, is all set to present its upcoming film ‘Lenin Pandian’. Directed by debutant filmmaker D.D. Balachandran, the film marks the debut of actor Dhaarshan Ganesan, grandson of legendary actor Sivaji Ganesan, as a lead actor. Centred around illegal sand mining, the film explores the lives of ordinary people and their rights, rooted in the way of life of our soil.


With ‘Lenin Pandian’ gearing up for its theatrical release on September 25, the promotional activities for the film are currently happening on a wide scale. The team has been travelling to different places, meeting audiences and theatre representatives as part of the promotions. As a part of this, lead actor Dhaarshan Ganesan visited Madurai for the film’s promotional activities. The warm response he received from fans and the people of Madurai has given the entire team an added boost.


Speaking about the reception he received in Madurai, Dhaarshan Ganesan said, “The first film I am acting in under the production of Sathya Jyothi Films, ‘Lenin Pandian’, is releasing on the 25th of this month. I have come to Madurai today as part of my first outstation promotional visit. Madurai, its people and the reception I received here were all amazing.”


Dhaarshan also said that he could personally feel the love and affection that the people of Madurai have had for legendary actor Sivaji Ganesan and his family for several decades. He added that experiencing the same affection being showered on him was deeply emotional. “Madurai is the land of valour. It is the land of Goddess Meenakshi. I am extremely happy that my artistic journey has begun from such a place,” he said.


Dhaarshan recalled that several people who met him spoke about their long-standing association with different generations of his family. “Many people told me, ‘We were with your grandfather, we were with your father, we were with your uncle, we were with your brother… and we will definitely be with you too.’” He also revealed that some people told him, “You look exactly like him,” referring to his grandfather Sivaji Ganesan.


According to Dhaarshan, those words brought him happiness, but at the same time, they also placed a much greater responsibility on his shoulders. He said that he understands that responsibility and will put in every effort to prove himself as a good actor. Many people met him in Madurai, took photographs, shared their affection and assured him that they would definitely watch ‘Lenin Pandian’, he added.


The meeting, held on September 19 at Sugapriya Theatre in Madurai, will remain in his heart as a beautiful beginning to his artistic journey, Dhaarshan said. He also expressed his gratitude to the manager of Sugapriya Theatre and everyone present there for welcoming and appreciating the team with warmth. “Madurai has not just given me a beginning; it has also given me confidence. I am continuing my journey with that confidence,” he said.


‘Lenin Pandian’ features Dhaarshan Ganesan alongside multi-talented artist Gangai Amaran in a prominent role. Actress Roja is making her return to the screen after a long gap with this film. Shrita Rao plays an important role, while George Marian, Aadukalam Naren, Yugendran, Jayaprakash, Bose Venkat, Ilavarasu and Bigg Boss Archana are also part of the cast. (Pentagan Media)


Presented by T.G. Thyagarajan, the film is produced by Senthil Thyagarajan and Arjun Thyagarajan under the banner of Sathya Jyothi Films. Written and directed by D.D. Balachandran, the film has cinematography by A.M. Edwin Sakay and editing by Nagooran Ramachandran. Stunt choreography is handled by Thalapathy Dinesh, while Athuuri Jeykumaar is the art director. (Pentagan Media)


Meanwhile, the promotional activities for ‘Lenin Pandian’ are continuing across various locations, and the warm reception received by Dhaarshan Ganesan in Madurai has brought fresh enthusiasm to the team. The affection shown by the audience towards Dhaarshan as the next-generation actor from the Sivaji Ganesan family, along with the memories they shared about his family, has also drawn attention.


With a distinctive storyline, experienced performers, the return of Roja to the screen after a long gap, Gangai Amaran in a prominent role and Dhaarshan Ganesan making his debut as a lead actor, ‘Lenin Pandian’ is set to hit theatres on September 25. As Dhaarshan Ganesan’s debut film as a lead actor, the film is arriving with considerable expectations ahead of its theatrical release.

வேட்டுவம்' பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

 'வேட்டுவம்' பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.











இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது.


 இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் 'World of Vettuvam' வீடியோ வெளியாகியுள்ளது.


'World of Vettuvam' வீடியோ, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.


 இப்படத்தின் PAN Indian வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், இந்தி பதிப்பிற்கு நடிகர் Pankaj Tripathi, தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் Rana Daggubati, மலையாள பதிப்பிற்கு நடிகர் Soubin Shahir, கன்னட பதிப்பிற்கு நடிகர் Kiccha Sudeep ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். 

தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார்.



அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள 'வேட்டுவம்', பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றால் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தனித்துவமான உலக அமைப்புடன் உருவாகியுள்ள இப்படம், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளையும் வலுவான ஆக்ஷன் களத்தையும் கொண்டுள்ளது.


படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்.

 இதன் மூலம் ஆக்ஷன் காட்சிகளுக்கு இயல்பான தன்மையையும், வித்தியாசமான திரை அனுபவத்தையும் உருவாக்கியுள்ளனர்.


ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான  அதிரடியான ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.


'வேட்டுவம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் PAN Indian திரைப்படமாக உருவாகியுள்ளது.


 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, அதன் பிரம்மாண்டமான உலகம் மற்றும் பா.இரஞ்சித்தின் இயக்கம் குறித்த எதிர்பார்ப்பு இந்தியத் திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் இயக்குநராக பா.இரஞ்சித் இருப்பதால், 'வேட்டுவம்' திரைப்படத்தின் அறிவிப்பும் பல்வேறு திரையுலக வட்டாரங்களில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநர் S.S. மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளர் செல்வா R.K., இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திரைக்கதையை  எழுத்தாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து எழுதியுள்ளார். வசனம் -  ப்ராங்ளின்.



World of Vettuvam' வீடியோ மூலம் இப்படத்தின் தனித்துவமான உலகம் ரசிகர்களுக்கு  படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.


https://www.youtube.com/watch?v=oZnAxf_5qYw